இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

அரியாசனம் !  கவிஞர் இரா .இரவி !

Updated On :20 பிப்ரவரி 2017, 3:53 pm IST
உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு 
உருக்குலைந்து வருவது வேதனை !
 
அரியாசன ஆசையில் மனிதன் இங்கே 
ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் !
 
அறம் மறந்து  அறிவிலி ஆகின்றான் 
ஆசைப் பிடித்து நாளும்  அலைகிறான்!
 
மனிதன் என்பதை மறந்து துளியும் 
மனிதாபிமானமின்றி மரமாகிறான்!
 
எப்படியும்  அரியாசனம் அமர்வதே 
எனது குறிக்கோள் என்று திரிகிறான் !
 
அரியாசனத்தில் அமர்ந்து முன்பு 
ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் !
 
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான் 
அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான் 

வாக்களித்த மக்களே வெறுக்கும்படி 
வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் !
 
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் 
அரியாசனம் துறந்த துறவி புத்தர் !
 
பேராசை பெரு நட்டம் என்று அன்றே
பெரியோர்கள் சொல்லி வைத்தனர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.