தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள்; பகுதி -1

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள்; பகுதி -1 - பக்.624; ரூ.400; பகுதி -2 -பக்.656; ரூ.410; தமிழில்: குறிஞ்சிவேலன்; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 5, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தியாகராயநகர், சென்னை-17.

News image
Updated On :17 அக்டோபர் 2016, 12:08 am IST

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள்; பகுதி -1 - பக்.624; ரூ.400; பகுதி -2 -பக்.656; ரூ.410; தமிழில்: குறிஞ்சிவேலன்; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 5, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தியாகராயநகர், சென்னை-17.
கார்ட்டூனிஸ்ட், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திரைக் கதாசிரியர், ஓவியர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன். அவருடைய ஐந்து நாவல்கள் இரு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.
முதல் தொகுப்பில் மூன்று நாவல்களும், இரண்டாவது தொகுப்பில் இரு நாவல்களும் இடம்பெற்றுள்ளன. பங்களா கட்ட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் விற்கச் செல்லும் ஐஏஎஸ் அதிகாரி, அவற்றை விற்காமல் திரும்பும் கதை "சல்லி வேர்கள்'. சுதந்திரப் போராட்ட வீரரின் ஒரே கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத சுதந்திர இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டும் நாவல் "ஐந்து சென்ட் நிலம்'. இந்த இரு நாவல்களும் நனவோடை உத்தியில் அமைந்த படைப்புகளாகும். செல்வந்தரான தந்தையால் ஆணாக வளர்க்கப்பட்ட மகளின் கதை "காட்டு வெளியினிலே'.
ஒவ்வொரு படைப்புக்கும் வித்தியாசமான கதைக் கருவை ஆசிரியர் கையாண்டிருப்பது வாசிப்பில் விறுவிறுப்பைத் தக்க வைக்கிறது.
உளவியலும் மர்மமும் நிறைந்த "ஒரு நெஞ்சத்தின் ஓலம் நாவல்' ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் 500 பக்கத்துக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ள பெரிய நாவல் "ஆறாம் விரல்'. வேதராமன் என்ற மனிதனில் இயல்பாக ஏற்படும் தீர்க்கதரிசன புலனறிவை ஆன்மிகப் போர்வையால் மூடி, அவனை அவதாரமாக்கி அரசியல்வாதிகளும், பெரும் தொழிலதிபர்களும் எவ்வாறு ஒரு மூலதனப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே இந்த நாவலின் கரு.
குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பு, வாசகர்களை வசப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.