பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்)

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்) - ம.திருமலை; பக்.232; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை -625001. 

News image
Updated On :19 ஜூலை 2021, 7:12 am

DIN

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்) - ம.திருமலை; பக்.232; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை -625001.
 தமிழின் தொன்மையையும், இலக்கியப் பெருமையையும் எக்காலத் தலைமுறைக்கும் எடுத்துரைக்கும் வளங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள்.
 எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பெரும் தொகுப்பில் பொருநராற்றுப்படையானது பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வரிசையில் இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படும் நூலாகும்.
 இசைப்பாடல் கலைஞர்களான பொருநர்கள் வறுமையில் வாடிய நிலையில், அந்த வறுமையைப் போக்க அரசர்களை நாடிச்சென்று அவர்தம் பெருமைகளைப் பாடி பரிசில் பெற்று வாழ்ந்ததை பொருநராற்றுப்படையின் மூலம் அறியமுடிகிறது.
 இந்நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தோடு, பொருநராற்றுப்படையை ஒப்பிட்டு ஆராய்ந்து அதை விளக்கியிருப்பதும், அதில் இடம் பெற்ற உவமைகளை பட்டியலிட்டிருப்பதும் மற்ற நூலாசிரியர்களில் இருந்து அவரை தனித்துவப்படுத்துகிறது. சங்க கால இலக்கியப் படைப்புகளில் பெண்பாற்புலவர்கள் ஏராளமானோர் இடம் பெற்றதாகக் கூறப்படும் நிûயில், இந்தப் பொருநராற்றுப்படையின் ஆசிரியரான முடத்தாமக்கண்ணியாரும் ஒரு பெண்பாற் புலவர் என்றே நம்பப்படுகிறது. முடத்தாமக்கண்ணியார் ஆணா, பெண்ணா என்ற ஆய்வு நோக்கில் அறிஞர்கள் பலர் விவாதித்திருப்பதைக் கூறியுள்ள நூலாசிரியர், முடத்தாமக்கண்ணியாரின் பெயர்க்காரணம் குறித்து அவரது பாடலில் உள்ள ஏற்றி எனும் சொல் மூலம் விளக்கமளித்திருப்பது சிறப்பாகும்.
 பொருநராற்றுப்படை மொத்தம் 248 பாடல்களை எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் விளக்கமும், நயவுரையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.
 ஆறு தலைப்புகளில் பொருநராற்றுப்படையை ஆய்வு நோக்கில் அலசி ஆய்ந்திருக்கிறார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.