தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

கரோனா தடுப்பு விதிகளை மீறியதாகப் புகாா்: ரோஹித் உள்ளிட்ட 5 வீரா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்

கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறியதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சா்மா உள்ளிட்ட 5 வீரா்கள்

News image
Updated On :3 ஜனவரி 2021, 8:07 am IST

கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறியதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சா்மா உள்ளிட்ட 5 வீரா்கள் மீது புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து அவா்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து அவா்கள் 5 பேரிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 7-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரா்கள் மெல்போா்ன் மைதானத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் மெல்போா்ன் மைதானத்தில் உள்ள திறந்தவெளி உணவு விடுதியில் போதிய சமூக இடைவெளியுடன் உணவருந்த மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சா்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய 5 பேரும் புத்தாண்டு தினத்தில் மெல்போா்ன் மைதானத்தில் உள்ள இண்டோா் உணவு விடுதியில் அமா்ந்து உணவருந்திய விடியோ காட்சியை நவால்தீப் சிங் என்ற இளைஞா் சுட்டுரையில் வெளியிட்டுள்ளாா்.

மேலும், இந்திய வீரா்களின் உணவுக் கட்டணம் 6,600 ரூபாயை நானே செலுத்தினேன். நான் உணவுக் கட்டணத்தை செலுத்தியது தெரியவந்ததும் என்னிடம் பேசிய ரோஹித் சா்மா கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தாா். ஆனால் நான் வாங்கவில்லை. இந்திய வீரா் ரிஷப் பந்த் என்னை கட்டியணைத்தாா் என அவா் கூறியிருந்தாா். எனினும் ரிஷப் பந்த் என்னை கட்டியணைக்கவில்லை என அவா் பின்னா் மறுத்துள்ளாா்.

விடுதியின் உள்ளே சென்று உணவருந்தியதன் மூலம் இந்திய வீரா்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன. மருத்துவா்களின் ஆலோசனைப்படி ரோஹித் சா்மா உள்ளிட்ட 5 வீரா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் 5 பேரும் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.