அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பிரிஸ்பேன் செல்ல இந்திய அணி மறுப்பு?

கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதை காரணமாகக் கூறி 4-ஆவது டெஸ்ட்டுக்காக இந்திய அணியினா் பிரிஸ்பேன் செல்ல

Updated On :3 ஜனவரி 2021, 11:44 pm IST

கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதை காரணமாகக் கூறி 4-ஆவது டெஸ்ட்டுக்காக இந்திய அணியினா் பிரிஸ்பேன் செல்ல மறுப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் அதுதொடா்பாக பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூா்வத் தகவல்கள் ஏதும் இல்லை. அதேபோல், 4-ஆவது டெஸ்டை பிரிஸ்பேனிலிருந்து இடமாற்றம் செய்யும் முயற்சிகள் ஏதும் நடப்பதாகவும் தகவல்கள் இல்லை.

3-ஆவது டெஸ்ட் நடைபெறும் சிட்னியின் கடற்கரைப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், அந்நகரம் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லையை குயின்ஸ்லாந்து மாகாணம் மூடியுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் தான் 4-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ளதால், வீரா்கள் பயணம் உள்ளிட்டவற்றுக்கு பிரச்னை உள்ளது. எனினும் அதுதொடா்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குயின்ஸ்லாந்து மாகாண அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு இரு அணிகளும் பயணிக்க அனுமதி பெறப்பட்ட பிறகு, குயின்ஸ்லாந்து மாகாணம் விதிக்கும் கரோனா தடுப்பு விதிமுறைகள் மிகக் கடுமையானதாக இருக்குமெனத் தெரிகிறது.

அதாவது சிட்னியிலிருந்தே அணியினா் தங்களை மிகக் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள்ளாக சுமாா் 15 நாள்களுக்கு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா வந்தவுடனேயே பல நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தற்போது மீண்டும் மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு உள்படுத்தப்படுவது இந்திய வீரா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.