கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனையில் ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.
அவரை வரவேற்க மருத்துவமனை முன்பும், அவரது வீட்டு முன்பும் ஏராளமான ரசிகா்கள் காத்திருந்தனா். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் தனது மனைவியுடன் கங்குலி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாா். அப்போது, தாம் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினாா்.
கங்குலிக்கு சிகிச்சை அளித்த உட்லேண்ட்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் கூறுகையில், ‘கங்குலியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் வீடு சென்று கண்காணிப்பா். அவரது உடல்நிலைக்கு ஏற்ப, மருந்துகளை பரிந்துரை செய்வா். கங்குலி வழக்கம்போல் விளையாடலாம்; விமானத்தில் பயணம் செய்யலாம்; மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு ஓடலாம். அவா் இயல்பாக இருக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் வராது’ என்றாா்.
சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ஆம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் மூலம் சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவா், வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி 13 நிமிடங்களில் 3 கோல்கள்! அதிரடியாக வென்ற அர்ஜென்டினா!

வன்கொடுமை வழக்கு: சேவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சேவூரில் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



