இந்தியக் கிரிக்கெட் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா ஷாட் ஆடவே பயப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.
புஜாராவின் ஆட்டம் குறித்து பார்டர் தெரிவித்தது:
"புஜாரா ஷாட் ஆடவே பயப்படுகிறார். ரன் குவிப்பதைக் காட்டிலும் தாக்குப்பிடிப்பதற்காக அவர் விளையாடுகிறார். 2018-19 தொடரில் இருந்த அதே வீரியத்தில் அவர் தற்போது இல்லை. ரன் குவிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறார். களத்தில் அவர் தேங்கி நிற்பது போல் தெரிகிறது. இந்திய பேட்டிங்கிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை."
முன்னதாக மற்றொரு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கும் புஜாராவின் ஆட்டத்தை விமரிசித்திருந்தார்.
சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 176 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







