கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.
கோவாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி தொடக்கம் முதலே அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி 15-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை கான்கால்வ்ஸ் அடித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய சென்னை அணிக்கு 21-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதையும் கான்கால்வ்ஸ் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தொடர்ந்து போராடிய ஒடிஸô அணி 63-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை டி பிரிட்டோ அடித்தார்.
இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் இந்த சீசனில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற சென்னை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


