தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு 3-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.

News image
Updated On :14 ஜனவரி 2021, 4:22 am IST

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.
கோவாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி தொடக்கம் முதலே அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி 15-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை கான்கால்வ்ஸ் அடித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய சென்னை அணிக்கு 21-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதையும் கான்கால்வ்ஸ் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தொடர்ந்து போராடிய ஒடிஸô அணி 63-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை டி பிரிட்டோ அடித்தார். 
இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் இந்த சீசனில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற சென்னை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.