அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

டெஸ்டில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்: டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்

​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :15 ஜனவரி 2021, 6:04 am IST


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆட்டத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரித் பூம்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவர்களுக்குப் பதில் மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பயணத்தின் தொடக்கத்தின்போது நடராஜன் இந்திய அணிக்கான வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகவே இருந்தார். அதன்பிறகு, வீரர்கள் பலருக்குக் காயம் ஏற்பட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 

வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜன் தற்போது அனைத்து ரக சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் கால் பதித்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.