அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ரூட், பேர்ஸ்டோவ் நிதானம்: முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜனவரி 2021, 12:04 am IST


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை பேட்டிங்: இங்கே க்ளிக் செய்யவும்..

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிராலே மற்றும் டொமினிக் சிப்லே களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 17 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி அமைத்து விளையாடினர். இலங்கைப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இருவரும் முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 8 ரன்கள் பின்தங்கியுள்ளது. பேர்ஸ்டோவ் 47 ரன்களுடனும், ரூட் ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இலங்கைத் தரப்பில் எம்புல்டேனியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.