நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலக ஹாக்கித் தொடர்: மும்பைக்கு 2-வது வெற்றி

சென்னை, மார்ச் 6: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் மும்பை மெரைன்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் சென்னை சீட்டாûஸ வீழ்த்தியது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:37 am

ஏ.வி. பெருமாள்

சென்னை, மார்ச் 6: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் மும்பை மெரைன்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் சென்னை சீட்டாûஸ வீழ்த்தியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-வது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் மூலம் சென்னைக்கு கோல் கிடைத்தது. இம்ரான் வார்ஸி இந்த கோலை அடித்தார். 13-வது நிமிடத்தில் மும்பையின் தேவிந்தர் வால்மீகி பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார்.

24-வது நிமிடத்தில் மும்பையின் அனுப் அந்தோனி, அற்புதமான கோல் ஒன்றை அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது மும்பை.

இதன்பிறகு 42-வது நிமிடத்தில் ஆஜ்மிர் சிங்கும், 52-வது நிமிடத்தில் விமல் லகராவும் கோலடிக்க மும்பையின் வெற்றி உறுதியானது. 66-வது நிமிடத்தில் சென்னை வீரர் சுனில் யாதவ் கோல் அடித்தார். இறுதியில் மும்பை அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

சென்னை சீட்டாஸ் வீரர்கள், தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்ததும் அவர்களின் தோல்விக்கு காரணமானது.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சென்னை அணி இதுவரை 4-ல் விளையாடி 2 தோல்விகளையும், 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.

கர்நாடகம் வெற்றி: பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் கர்நாடகா லயன்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் சண்டீகர் கமெட்ஸ் அணியை வீழ்த்தியது.

12 வீரர்களுடன் விளையாடிய மும்பை

இந்த ஆட்டத்தில் இடைவேளைக்குப் பிறகு களமிறங்கிய மும்பை அணி 11 பேருக்குப் பதிலாக 12 பேருடன் களமிறங்கிவிட்டது. 3 நிமிடங்களுக்குப் பிறகே கூடுதலாக ஒரு வீரருடன் மும்பை விளையாடுவதை சென்னை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மும்பை கேப்டன் அட்ரியான் டிசெüசா, நடுவரால் எச்சரிக்கப்பட்டார்.

இம்ரான் வார்ஸி 8 கோல்

சென்னை அணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் வீரரான இம்ரான் வார்ஸி இந்த ஆட்டத்தில் அடித்த கோலோடு சேர்த்து இதுவரை மொத்தம் 8 கோல்களை அடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.