உலக ஹாக்கித் தொடர்: சென்னை - புணே ஆட்டம் டிரா
சென்னை, மார்ச் 9: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் சென்னை சீட்டாஸ் - புணே ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்


சென்னை, மார்ச் 9: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் சென்னை சீட்டாஸ் - புணே ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே சென்னைக்கு கோல் கிடைத்தது. ஆடம் சின்கிளேயர் இந்த கோலை அடித்தார். 6-வது நிமிடத்தில் புணேவின் ரோஸன் மின்ஸ் கோலடிக்க இரு அணிகளும் 1-1 என்ற நிலையை எட்டியது.
30-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் வார்ஸி கோலடிக்க சென்னை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 5-வது நிமிடத்தில் புணேயின் விகாஸ் டோப்போ கோலடித்தார்.
44-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் மீண்டும் ஒரு கோலடித்தார் இம்ரான் வார்ஸி. இதனால் சென்னை 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிய 7 நிமிடங்களே இருந்தபோது சென்னை சீட்டாஸ் வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 64-வது நிமிடத்தில் புணேவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிம்ரன்தீப் ரந்தவா கோலடித்தார்.
இதன்பிறகு சென்னை வீரர்கள் கடுமையாகப் போராடியபோதும் கோலடிக்க முடியாமல் போனது. இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும், புணே அணி 3 வாய்ப்புகளை கோட்டைவிட்டன. இம்ரான் வார்ஸி இந்த ஆட்டத்தோடு மொத்தம் 10 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...