திருச்சி, மே 4 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் சனிக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.
திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 18 முன்னணி அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வென்றது. தமிழ்நாடு போலீஸ் அணி வீரர்கள் டேவிட் ஆரோக்கியராஜ், திவாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
2-வது போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை வென்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியின் அருள் ஸ்டாலின், பிட்டப்பா, முட்டப்பா, தாமு ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
3-வது இடத்துக்கான போட்டி சனிக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இதில் தெற்கு ரயில்வே அணியும், ஐ.சி.எப். அணியும் மோதவுள்ளன. அதைத் தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியின் நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் கட்சி ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறது! - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

