இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விரும்புவதாக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இப்போது பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளெட்சரின் ஒப்பந்த காலம் 2013ஆம் ஆண்டு மார்ச்சுடன் நிறைவடைய உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனால், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று தெரிகிறது.
இதனால், அவருக்குப் பதிலாக புதுப்பயிற்சியாளர் இந்திய அணிக்கு நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, "இந்தியாவில் திறமையான பயிற்சியாளர்கள் உள்ளனர். அணிக்கு இந்தியப் பயிற்சியாளர் தேவை. இந்தியர் ஒருவரை பயிற்சியாளராக நியமிப்பதற்கான தருணம் இப்போது வந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தான் பயிற்சியாளராக வேண்டும் என்று விரும்பியே கங்குலி இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் பாரதிராஜா! இபிஎஸ் இரங்கல்

பாரதிராஜா மறைவு: சரத்குமார் இரங்கல்

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



