இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவுக்கு திங்கள்கிழமை வந்தனர்.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டி 3ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் விளையாட, சென்னையிலிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்கத்தாவை அடைந்தனர். பலத்த பாதுகாப்புடன் ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியினர் ஈடன் கார்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அணியின் மேலாளர் தெரிவித்தார்.
2ஆவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் நடைபெறவுள்ளது.
தோனி, பிளெட்சர் வருகை: இந்திய அணியின் கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெட்சர், ரவீந்திர ஜடேஜா மற்றும் அசோக் திண்டா ஆகியோரும் திங்கள்கிழமையே கொல்கத்தா வந்தடைந்தனர். அணியின் மற்ற வீரர்கள் செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவுக்கு வருவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்
பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்பு!

அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கும் அமெரிக்கா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



