சேவாக் இனி இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சேவாக்கின் ஆட்டத்திறன் மங்கத் தொடங்கிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். மோசமான பார்ம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட சேவாக்கிற்கு, இங்கிலாந்தின் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான உத்தேச அணியிலும் இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பாய்காட் மேலும் கூறியது: இந்திய அணிக்காக சேவாக் மீண்டும் விளையாடுவார் என்று நினைக்கவில்லை. இந்திய அணி தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். தற்போது இளம் வீரர்களுக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி வருகிறது.
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றபோதே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினேன். அப்படி வாய்ப்பு கொடுத்தால்தான் உலகக் கோப்பை போட்டிக்காக சிறந்த அணியை உருவாக்க முடியும். சேவாக் சில மைதானங்களில் சிறப்பாக விளையாடி ரன் குவித்துள்ளார்.
ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சில மைதானங்களில் அவர் சரியான முறையில் தற்காப்பு ஆட்டத்தைக் கையாண்டதில்லை. எனினும் சேவாக் போன்ற வீரர்கள் தங்களின் ஆட்டமுறைகளை மாற்றுவது கடினம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



