கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

நியூஸிலாந்து ஓபன்: 3-வது சுற்றில் ஜெயராம், அரவிந்த் பட்

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், அரவிந்த் பட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய (3-வது) சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Updated On :12 ஏப்ரல் 2013, 1:01 am IST

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், அரவிந்த் பட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய (3-வது) சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் அஜய் ஜெயராம் 24-22, 21-5 என்ற நேர் செட்களில் நார்வேயின் மரியஸ் மிர்ரையும், இந்தியாவின் அரவிந்த் பட் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீரரான கிர்தேஷ் தின்ட்வாலையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 3-வது சுற்றில் அஜய் ஜெயராம், தென் கொரியாவின் ஜி ஹூன் ஹிங்கையும், அரவிந்த் பட், இந்தோனேசியாவின் ஆன்ட்ரேவையும் சந்திக்கின்றனர்.

மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் குருசாய் தத், ஆனந்த் பவார், சேதன் ஆனந்த் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாரதா ஜஸ்தி 21-18, 17-21, 17-21 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் விக்கி கோப்லேன்டிடம் தோல்வி கண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.