நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், அரவிந்த் பட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய (3-வது) சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் அஜய் ஜெயராம் 24-22, 21-5 என்ற நேர் செட்களில் நார்வேயின் மரியஸ் மிர்ரையும், இந்தியாவின் அரவிந்த் பட் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீரரான கிர்தேஷ் தின்ட்வாலையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 3-வது சுற்றில் அஜய் ஜெயராம், தென் கொரியாவின் ஜி ஹூன் ஹிங்கையும், அரவிந்த் பட், இந்தோனேசியாவின் ஆன்ட்ரேவையும் சந்திக்கின்றனர்.
மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் குருசாய் தத், ஆனந்த் பவார், சேதன் ஆனந்த் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாரதா ஜஸ்தி 21-18, 17-21, 17-21 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் விக்கி கோப்லேன்டிடம் தோல்வி கண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

