ஜப்பான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ்-ஹர்மீத் தேசாய் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
ஜப்பானின் யோகோஹமா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி 11-8, 2-11, 11-6, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் கிறிஸ்டியான் கார்ல்சன்-மத்தியாஸ் கார்ல்சன் ஜோடியை வீழ்த்தியது.
இந்திய ஜோடி தங்களின் காலிறுதியில் ஜப்பானின் ஜினுய்டா-யோஷிமுரா ஜோடியை சந்திக்கிறது. முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல் 7-11, 20-18, 5-11, 11-8, 11-6, 11-2 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சியா-ஷெங் லீயை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் 11-9, 3-11, 12-14, 4-11, 4-11 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சியன்-அன் ஷென்னிடம் தோல்வி கண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


