/

துராந்த் கோப்பை கால்பந்து: ஓஎன்ஜிசி, கடற்படை அணிகள் வெற்றி

துராந்த் கால்பந்து கோப்பை போட்டியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.

Updated On :11 செப்டம்பர் 2013, 5:52 pm

துராந்த் கால்பந்து கோப்பை போட்டியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.

தில்லியில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் 126-வது துராந்த் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ராணுவ ரெட் அணியை வீழ்த்தியது.

ஓஎன்ஜிசி அணியைச் சேர்ந்த அசிம் ஹசன் 2 கோல்களையும், ஹென்றி எஸஸ் மற்றும் பர்வீந்தர் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 2-0 என்ற கணக்கில் இந்திய விமானப் படை அணியை வீழ்த்தியது. கடற்படை தரப்பில் பி.ரியாத்தும், ரமன் ராயும் தலா ஒரு கோல் அடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.