மதுரையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வருமான வரித்துறை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன.
மதுரை மாவட்டம், பசுமலை சிஎஸ்ஐ மைதானத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. மதுரை மாவட்ட கூடைப்பந்து சங்கம் மற்றும் பெகசஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் நடைபெறும் இப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் கேரள மின்வாரிய அணி 63-46 என்ற புள்ளிக் கணக்கில் தெற்கு மண்டல போலீஸ் அணியையும், கேரள போலீஸ் அணி 93-76 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை அரசு சிறப்பு விளையாட்டு விடுதி அணியையும் தோற்கடித்தன. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரித்துறை அணி 63-37 என்ற புள்ளிக் கணக்கில் கோபாலன் நினைவு அணியை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


