நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தேசிய கூடைப்பந்து: வருமான வரித்துறை வெற்றி

மதுரையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வருமான வரித்துறை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன.

Updated On :13 மே 2013, 12:09 am IST

மதுரையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வருமான வரித்துறை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன.

மதுரை மாவட்டம், பசுமலை சிஎஸ்ஐ மைதானத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. மதுரை மாவட்ட கூடைப்பந்து சங்கம் மற்றும் பெகசஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் நடைபெறும் இப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் கேரள மின்வாரிய அணி 63-46 என்ற புள்ளிக் கணக்கில் தெற்கு மண்டல போலீஸ் அணியையும், கேரள போலீஸ் அணி 93-76 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை அரசு சிறப்பு விளையாட்டு விடுதி அணியையும் தோற்கடித்தன. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரித்துறை அணி 63-37 என்ற புள்ளிக் கணக்கில் கோபாலன் நினைவு அணியை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.