இலங்கை தொடர்: பயிற்சி ஆட்டம் டிரா!

இந்தியாவின் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Updated on
1 min read

இந்தியா - இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரின் லெவன் அணிகளிடையிலான 3 நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பிறகு ஆடிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. 31 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 342 ரன்கள் முன்னிலை பெற்றது. புஜாரா 31, ராகுல் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று தனது ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில், 58.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து  ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராகுல் 47 ரன்கள் எடுத்தார்.

411 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரின் லெவன் அணி, ஆட்ட நேர முடிவில், 54 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது. இதனால் இந்தப் போட்டி டிரா ஆனது. இலங்கை அணியின் சில்வா 83 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அகஸ்ட் 12-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com