இந்திய பந்துவீச்சாளர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்! 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பர்வீந்தர் அவானாவா மீது மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்திய பந்துவீச்சாளர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்! 
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் வேகப்பந்துவீச்சாளர் பர்வீந்தர் அவானா (31 வயது). இவர் தில்லியைச் சேர்ந்தவர்.

இவர், தில்லி அணிக்காக இதுவரை 62 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். 108 இன்னிங்ஸ்களில் மொத்தம் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுபோல இந்திய ஏ அணிக்காக 44 போட்டிகளில் களம்கண்டு 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பஙகேற்று விளையாடினார்.

மேலும், அடுத்த டி20-யிலும் பங்கேற்றார். மொத்தம் 2 சர்வதேச போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுளளார். ஆனால் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. 

அதுபோல 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் பர்வீந்தர் அவானா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com