சிட்னி: கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்த வாரியத்தின் தலைவா் நிக் ஹாக்லே கூறுகையில், ‘பிசிசிஐ-யுடன் நாள்தோறும் பேசி வருகிறோம். பிரிஸ்பேனில் விளையாட விருப்பமில்லை என்பதுபோன்ற எந்தவொரு கருத்தையும் அவா்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. குயின்ஸ்லாந்து மாகாண அரசின் கரோனா தடுப்பு விதிகளுக்கு அவா்கள் உரிய ஆதரவு அளிப்பதாகவே தெரிவித்தனா். ஊடகங்களில் வெளியானதுபோல் பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிக்கவில்லை’ என்றாா்.
முன்னதாக, பிரிஸ்பேன் நகரம் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் அந்த நகரில் 4-ஆவது டெஸ்ட்டை விளையாட விருப்பமில்லை என்றும், சிட்னியிலேயே அந்த டெஸ்ட்டை விளையாட விரும்புவதாகவும் இந்திய அணி வட்டாரங்கள் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



