விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராகும் முன்னாள் இங்கிலாந்து வீரர்

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனதன் டிராட் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜூலை 2022, 12:00 pm IST

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனதன் டிராட் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். 

41 வயதாகும் டிராட் தென்னாப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிவர். இவர் 2018இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஸ்காட்லாந்து அணிக்கு 2021 டி20 போட்டிகளுக்கு பேட்டிங் குறித்து ஆலோசனை வழங்குபவராக பணிபுரிந்தார். ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து சுற்று பயணத்தின் போது இவர் பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆனது குறித்து டிராட் கூறியதாவது: 

ஒரு கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி கடந்த சில வருடங்களாக ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்பதற்காக நான் பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன். ஆப்கானிஸ்தான் மக்கள் பெருமைப்படும் வகையில் அணியினை வழிநடத்துவேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.