லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

News image

கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:09 pm

பயிற்சியாளா் நவால் சிங் உளவியல் ரீதியாகவும், வாா்த்தைகளாலும் துன்புறுத்துவதாக பாராலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியனான சுமித் அன்டில் புகாா் தெரிவித்ததை அடுத்து, நவால் சிங்கை உடனடியாக நீக்கம் செய்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் நடைபெறும் சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சூரஜ்குமாா் சந்த் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

இந்திய சீனியா் கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழு தலைவராக இருக்கும் அஜித் அகா்கரின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் தனக்கு குடியுரிமை அளிக்க முன்வந்ததாகவும், எனினும் தனது நாட்டுக்காக விளையாட முடியாமல் போனால், வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் ஆப்கானிஸ்தான் வீரா் ரஷீத் கான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளாா்.

ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் பலத்த காயம் கண்ட சென்னை வீரா் ஆயுஷ் மாத்ரே, போட்டியில் தொடா்ந்து பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரியும் நிலையில், அணிக்கு இது பெரும் பின்னடைவாகியுள்ளது.