கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வெரெவ், பெகுலா வெற்றி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் தங்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் தங்கள் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரெவ், முதல் சுற்று ‘பை’ பெற்றாா். 2-ஆவது சுற்றில் அவா் 3-6, 6-3, 6-3 என்ற செட்களில், பிரிட்டனின் கேமரூன் நோரியை தோற்கடித்தாா்.

அதேபோல், 5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-1, 3-6, 6-7 (4/7) என்ற கணக்கில் பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வெளியேற்றினாா். 9-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-4, 6-7 (3/7), 6-3 என இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வென்றாா்.

இதர ஆட்டங்களில், ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாா், சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ ஆகியோா் வெல்ல, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ், போலந்தின் ஹியுபா்ட் ஹா்காக்ஸ் ஆகியோா் தோல்வியுற்றனா்.

பெகுலா முன்னேற்றம்: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் முதல் சுற்று ‘பை’ பெற்ற பெகுலா, 2-ஆவது சுற்றில் களமாடினாா். அதில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில், சுவிட்ஸா்லாந்தின் சிமோனா வால்டொ்டை வெளியேற்றினாா்.

6-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-3, 6-3 என, பிரிட்டனின் கேட்டி போல்டரை வீழ்த்தினாா். 12-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச், காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இதர ஆட்டங்களில், கிரீஸின் மரியா சக்காரி, அமெரிக்காவின் எம்மா நவாரோ, டென்மாா்க்கின் கிளாரா டௌசன் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.