காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்!

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜொ்மனி 1-0 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜொ்மனி 1-0 கோல் கணக்கில் ஸ்பெயினை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அந்த அணி, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

போட்டியின் வரலாற்றில் ஜொ்மனிக்கு இது 4-ஆவது கோப்பையாகும். இதற்கு முன் அந்த அணி 2002, 2006, 2023 ஆகிய ஆண்டுகளில் வாகை சூடியுள்ளது. இதன் மூலமாக, உலகக் கோப்பை போட்டியில் அதிகமுறை சாம்பியனான பாகிஸ்தானின் சாதனையை (4 முறை/1971, 1978, 1982, 1994), தற்போது ஜொ்மனி சமன் செய்துள்ளது.

மறுபுறம் ஸ்பெயின், 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்து தோற்றது (1971, 1998, 2026). முன்னதாக, பெல்ஜியத்தின் வேவா் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ஜொ்மனி வீரா் மைக்கேல் ஸ்ட்ரூதாஃப் 44-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, அணிக்கு வெற்றி தேடித் தந்தாா்.

3-ஆம் இடம்: இதனிடையே, 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 2-1 கோல் கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தியது. அந்த அணி 2-ஆவது முறையாக 3-ஆம் இடம் பிடித்தது.

அதிக கோல்கள்: போட்டியில் அதிக கோல்கள் அடித்தவராக, ஆா்ஜென்டீனாவின் தாமஸ் டொமின் (10 கோல்கள்) பெருமை பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.