

பிரேஸிலில் நடைபெற்ற ரியோ ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரி திங்கள்கிழமை சாம்பியன் ஆனார்.
இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த எட்செவெரி 3-6, 7-6 (7/3), 6-4 என்ற செட்களில், சிலியின் அலெக்ஸôண்ட்ரோ டபிலோவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலமாக எட்செவெரி தனது முதல் ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.
இதற்கு முன் 3 ஏடிபி டூர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை வந்து தோல்வியைத் தழுவினார். டபிலோவை 2}ஆவது முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ள எட்செவெரி, 2}ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இரட்டையர்: இப்போட்டியிலேயே இரட்டையர் பிரிவில், பிரேஸிலின் மார்செலோ மெலோ/ஜாவ் ஃபொன்சேகா கூட்டணி 4}6, 6}3, 10}8 என்ற செட்களில், நெதர்லாந்தின் ராபின் ஹேஸ்/கான்ஸ்டன்டின் ஃப்ரான்ட்ùஸன் இணையை வீழ்த்தி வாகை சூடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.