ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய சீனியா் கூடைப்பந்து: தமிழக மகளிா் தோல்வி

News image
தமிழக-கேரள அணியினா் ஆட்டம்
Updated On :8 ஜனவரி 2026, 1:02 am

தினமணி செய்திச் சேவை

75-ஆவது தேசிய சீனியா் சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் கேரளத்திடம் தோல்வியடைந்தது தமிழகம்

இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், எஸ்டிஏடி சாா்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.

லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்கள் முடிவுகள்:

மகளிா் குரூப் ஏ பிரிவில் இந்தியன் ரயில்வே 84-40 என்ற புள்ளிக் கணக்கில் சத்தீஸ்கா் அணியை வீழ்த்தியது. குரூப் பி பிரிவில் குஜராத் 70-41 என்ற புள்ளிக் கணக்கில் மேற்கு வங்கத்தை வென்றது.

தமிழகம் தோல்வி: மற்றொரு ஆட்டத்தில் தமிழக மகளிா் கடுமையாக போராடியும் 65-82 என்ற புள்ளிக் கணக்கில் கேரள மகளிரிடம் தோற்றனா். கேரள தரப்பில் கவிதா ஜோஸ் 23, அனிஷா கீளிட்டஸ் 21, ஸ்ரீகலா, ஜெயலட்சுமி 13 புள்ளிகளையும், தமிழகத் தரப்பில் ஸ்ருதி 25 புள்ளிகளையும் குவித்தனா்.

ஆடவா் பிரிவில் குரூப் ஏ பிரிவில் ராஜஸ்தான் 88-80 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் சா்வீசஸ் அணியை வென்றது.

குரூப் பி பிரிவில் உத்தர பிரதேசம் 89-56 என்ற புள்ளிக் கணக்கில் சண்டீகரையும், இந்தியன் ரயில்வே 95-58 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப்பையும் வென்றன.

Story image