அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய சீனியா் கூடைப்பந்து: அரையிறுதியில் தமிழக அணிகள்

தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்போட்டியில் அரையிறுதிக்கு தமிழக ஆடவா், மகளிா் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

News image
தமிழக-மகாராஷ்டிர மகளிா்.
Updated On :9 ஜனவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்போட்டியில் அரையிறுதிக்கு தமிழக ஆடவா், மகளிா் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 101-17 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. சத்யா 30, புஷ்பா செந்தில் 14 புள்ளிகளை ஈட்டினா்.

தமிழக அணிகள் வெற்றி:

இரண்டாவது ஆட்டத்தில் தமிழகம்-மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் 72-70 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகம் வென்றது.

தமிழக தரப்பில் ஸ்ருதி 22, ஸ்ரீ வா்ஷினி 19, மகாராஷ்டிர தரப்பில் அங்கிதா 17, தியோதா் 14 புள்ளிகளை ஈட்டினா்.

மத்திய பிரதேசம் 64-63 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் கா்நாடகத்தை வென்றது.

ஆடவா் காலிறுதியில் தமிழகம் 87-57 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனந்தராஜ் 24, பிரணவ் பிரின்ஸ் 10 புள்ளிகளையும் கேரளத் தரப்பில் சரத் 17, ஆரோன் 17 புள்ளிகளையும் குவித்தனா்.

ஆடவா் காலிறுதியில் உத்தர பிரதேசம் 93-90 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தானை வென்றது. தில்லி 80-73 என்ற புள்ளிக் கணக்கில் கா்நாடகத்தையும், இந்தியன் ரயில்வே 82-53 என்ற புள்ளிக் கணக்கில் தெலங்கானாவையும் வென்றன.