வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வீணாகிய வியூகம்... இங்கிலாந்து கோல்கீப்பர் தண்ணீர் பாட்டிலில் பெனால்டி ஷூட் அவுட் ‘சீக்ரெட்’!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து கோல்கீப்பரின் தண்ணீர் பாட்டிலில் குறிப்புகள் எழுதி வைத்திருந்த நிகழ்வு இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருவதைப் பற்றி...

News image

இங்கிலாந்து கோல்கீப்பர் தண்ணீர் பாட்டிலைப் பார்த்து மெஸ்ஸியின் ரியாக்‌ஷன்.

Updated On :16 ஜூலை 2026, 4:36 pm IST

ஆர்ஜென்டீனா அணியை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து கோல்கீப்பரின் தண்ணீர் பாட்டிலில் குறிப்புகள் எழுதிவைத்திருந்த நிகழ்வு இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதின.

அமெரிக்​கா​வின் மெர்​சிடீஸ் பென்ஸ் திடலில் அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி சூடு பிடித்தது. இரண்டு அணிகளும் கோல் அடிக்க பல முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், 55-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கோர்டான் கோல் கணக்கைத் தொடங்க, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தில் 80 நிமிடங்களைக் கடந்த நிலையில், வலிமைமிக்க ஆர்ஜென் டீனா அணி கோல் எதுவும் போடாததால், அவ்வளவுதான் முடிந்துவிட்டதா என்று அனைவரும் நினைத்த நேரத்தில், 85-ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீன வீரர் ஃபெர்னாண்டஸ் முதல் கோலை போட்டார். இதனால், ஆட்டம் சமனில் முடிய வாய்ப்பிருக்கும் என்று அனைவரும் நினைக்க, ஸ்டாப்ஏஜ் நிமிடத்தில் 90+2 மார்டினஸ் இரண்டாவது கோல் போட்டு ஆர்ஜென்டீன அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

ஆட்டம் முடிந்ததும், வீரர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​லியோனல் மெஸ்ஸி மற்றும் சக வீரர் நிக்கோ கோன்சலஸின் ரியாக்‌ஷன் ஆட்டத்திலிருந்து அனைவரையும் திசைத்திருப்பியது.

இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட்டின் தண்ணீர் பாட்டியலை மெஸ்ஸியும், சக வீரர்களும் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டம் ஒருவேளை சமனில் முடிந்து பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றால், எந்தெந்த வீரர் எந்த திசையில் பந்தை அடிப்பார்கள் என்ற குறிப்புகளை கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் ஒட்டி வைத்திருந்தார்.

போட்டியில் வெற்றி பெறும் வேட்கையில் வியூகங்களுடன் வந்திருந்த இங்கிலாந்து வீரர்களால், வலிமைமிக்க ஆர்ஜென்டீன அணியை வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்து அணியின் ராஜதந்திரங்கள் அனைத்து வீணாகிவிட்டதாகவும், போட்டிக்குப் பின்னர் மெஸ்ஸியின் ரியாக்‌ஷன் விடியோக்களும் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Summary

In the middle of Argentina's celebrations for sealing a spot in the FIFA World Cup2026 final, Lionel Messi found something that completely took his mind away from the game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.