பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் தோல்வியைச் சந்தித்தது இந்திய கபடி அணி!

கபடி போட்டியின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்துள்ளது தென் கொரிய அணி... 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2018, 5:31 pm IST

18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற கபடி போட்டியின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்துள்ளது தென் கொரிய அணி. 

2016 கபடி உலகக் கோப்பைப் போட்டியிலும் தென் கொரியாவிடம் இந்திய அணி தோற்றது. எனினும் பிறகு கோப்பையை இந்திய அணி வென்றது. 

இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே தென் கொரிய அணி இந்தியாவுக்குக் கடும் சவாலை அளித்தது. முதல் பாதியில் அந்த அணி, 14-11 என முன்னிலை பெற்றிருந்தது. கடைசிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்தியாவைத் தோற்கடித்து கவனத்தை ஈர்த்தது கொரிய அணி.

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்திய கபடி அணி சந்திக்கும் முதல் தோல்வி இது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் தாய்லாந்தைச் சந்திக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.