சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

200 மீ. ஓட்டப்பந்தயம்: இறுதிச்சுற்றுக்கு டுட்டி சந்த் தகுதி, ஹிமா தாஸ் தகுதியிழப்பு!

மகளிர் 200 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு  இந்தியாவின் டுட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார்...

News image
Updated On :28 ஆகஸ்ட் 2018, 12:16 pm

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 200 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு  இந்தியாவின் டுட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற 200 மீ. ஓட்டத்தின் அரையிறுதிச் சுற்றில், டுட்டி சந்த் 23.00 விநாடிகளில் ஓடி முதலிடம் பிடித்தார். இதையடுத்து அவர் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளார். 

எனினும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹிமா தாஸ் தவறுதலாக ஓட்டத்தைத் தொடங்கியதால் தகுதியிழப்பு அடைந்தார். 

22 வயதான டுட்டி சந்த், சமீபத்தில் நடைபெற்ற மகளிர் 100 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்றில் 11.32 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியப் போட்டியில் கடந்த 20 வருடங்களில் இந்தப் பிரிவில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. இதனால் 200 மீ. ஓட்டப்பந்தயத்திலும் அவர் பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இறுதிச்சுற்று நாளை மாலை இந்திய நேரம் 5.20 மணிக்கு நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.