மேற்கிந்தியத் தீவுகள் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதின் மூலம் அரையிறுதிச் சுற்றையும் நெருங்கியுள்ளது இந்தியா.
முதலில் ஆடிய இந்தியா 268/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. இந்திய வெற்றியில் கேப்டன் கோலி, தோனி, பாண்டியா, ஷமி, பும்ரா, சஹல், குல்தீப் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர்.