இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பிசிசிஐ செயலராகும் அருண் ஜெட்லி மகன்?

பிசிசிஐ செயலராக அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

ரோஹன் ஜெட்லி

படம் | எக்ஸ்

Updated On :26 ஆகஸ்ட் 2024, 11:06 am

DIN

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் செயலராக அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோஹன் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் அடுத்த செயலராக தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் செயலராக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷா, அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ள நிலையில் அந்தப் பதவிக்கு ரோஹன் ஜெட்லியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ரோஹன் ஜெட்லி மாற்றப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவு ஜெய் ஷாவுக்கு இருப்பதால் அவர் ஐஐசி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. எனவே, தலைவர் தேர்வு வெறும் ஒரு சம்பிரதாயத்திற்காக நடத்தப்படவுள்ளது.

ரோஹன் ஜெட்லியின் பெயர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக ஆவதற்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறது.

பிசிசிஐயின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னி உள்பட மற்ற உயர்மட்ட அதிகாரிகளின், பதவிக்காலத்தில் இன்னும் ஒரு வருடம் மீதமுள்ளதால், அவர்கள் அதேப் பதவிகளில் தொடர்வார்கள்.

ஐஐசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்றும், அவரது தற்போதைய பதவிக்காலம் நவம்பர் மாத இறுதியில் முடிவடையும் போது பதவியில் இருந்து விலகுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரேக் பார்க்லே 2020 நவம்பரில் ஐஐசி தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 2022 ஆம் ஆண்டில் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.