அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணையும் ஷிகர் தவான்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த ஷிகர் தவான் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ளார்.

News image

ஷிகர் தவான் - படம் | ஐசிசி

Updated On :26 ஆகஸ்ட் 2024, 3:47 pm IST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த ஷிகர் தவான் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போது அணியில் இடம்பெற்று விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஷிகர் தவான் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது நான் விரும்பி எடுத்த முடிவே. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்னுடைய உடல் இன்னும் ஒத்துழைக்கிறது. கிரிக்கெட் என்னுடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. என்னிடமிருந்து ஒருபோதும் கிரிக்கெட் விலகிச் செல்லாது. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைய ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமான புதிய நினைவுகளை உருவாக்கவுள்ளேன் என்றார்.

இந்திய அணிக்காக ஷிகர் தவான் 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.