கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

19 சிக்ஸர்கள்... டி20 போட்டிகளில் ஆயுஷ் பதோனி புதிய சாதனை!

டி20 போட்டிகளில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் ஆயுஷ் பதோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

News image

படம் | தில்லி பிரீமியர் லீக் (எக்ஸ்)

Updated On :31 ஆகஸ்ட் 2024, 8:06 pm IST

டி20 போட்டிகளில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் ஆயுஷ் பதோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தில்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் பதோனி 165 ரன்களும் (55 பந்துகளில்) (8 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்ஸர்கள்), பிரியன்ஷ் ஆர்யா 120 ரன்களும் (50 பந்துகளில்) (10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள்) எடுத்தனர். பிரியன்ஷ் ஆர்யா ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 போட்டிகளில் உலக சாதனை

தில்லி பிரீமியர் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் ஆயுஷ் பதோனி 19 சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம், புதிய உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் எஸ்டோனியா வீரர் சஹில் சௌகான் இருவரும் டி20 போட்டி ஒன்றில் 18 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவர்களது சாதனையை ஆயுஷ் பதோனி முறியடித்துள்ளார்.

பார்ட்னர்ஷிப் சாதனை

சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர்களான ஆயுஷ் பதோனி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தனர். டி20 போட்டிகளில் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அதிகபட்ச ரன்கள் சாதனை

சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட் செய்த சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. டி20 போட்டிகளில் ஒரு அணியால் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டி20 போட்டிகளில் மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நேபாளம் 314 ரன்கள் குவித்ததே ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால், அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.