திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி; தொடரில் முன்னிலை!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image

படம் | AP

Updated On :1 டிசம்பர் 2024, 8:40 am

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 93 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 499 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 171 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 84 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

104 ரன்கள் இலக்கு

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 254 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 103 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் ஜேக்கோப் பெத்தேல் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.