சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ரியான், பவுமா அசத்தல்: தெ.ஆ.வுக்கு வலுவான தொடக்கம்!

இலங்கைக்கு எதிரான போட்டியில் ரியான், பவுமா அசத்தல்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:02 pm IST

தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கியூபார்காவில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் முதல் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்யவந்த டோனி ஜி ஜோர்ஜி டக் -அவுட்டாகி வெளியேற, எய்டன் மார்க்ரம் 20 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடந்தப் போட்டியில் சதம் விளாசிய ஸ்டப்ஸ் 4 ரன்னில் அவுட்டாக, ரியான் ரிக்கெல்ட்சன், கேப்டன் தெம்பா பவுமா இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் ரியான் சதமும், தெம்பா பவுமா அரைசதமும் விளாசினர்.

ரியான் 101 ரன்களிலும், தெம்பா பவுமா 78 ரன்களிலும் வெளியேறினர். தெம்பா முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும், 2-வது இன்னிங்ஸில் அரைசதமும் விளாசியிருந்தார்.

முதல் நாள் முடிவில் 86.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் கைல் வெரையன் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இலங்கை அணித் தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டம் நாளை(டிச.6) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.