நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜெய்ஸ்வாலை பழிதீர்த்த மிட்செல் ஸ்டார்க்..! ஆக்ரோஷமாக கொண்டாடிய விடியோ வைரல்!

இந்திய வீரர் ஜெய்ஸ்வாலின் விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடிய ஸ்டார்க் விடியோ வைரலாகி வருகிறது.

News image

மிட்செல் ஸ்டார்க் - படம்: ஏபி

Updated On :6 டிசம்பர் 2024, 11:27 am IST

முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரரும் வேகப் பந்துவீச்சாளருமான மிட்செல் ஸ்டார்க் ஓவரில் அதிரடியாக விளையாடியது மட்டுமல்லாமல் 142 கி.மீ/மணி வேகத்தில் வீசிய ஸ்டார்க்கிடம், “உங்களது பந்து மிக மெதுவாக வருகிறது” எனக் கூறினார்.

பின்னர் ஸ்டார்க் ஜெய்ஸ்வாலை பாராட்டி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டினை வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்.

விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 12இல் 11 வெற்றி பெற்றுள்ளது. மிட்செல் ஸ்டார்க்தான் ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக 50 விக்கெட்டுகள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்க் பந்து கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் 66 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

இந்திய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் போலாண்ட் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.