முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

3-ஆவது டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெறாமலிருக்க இந்திய அணி போராட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் இன்று(டிச. 17) தொடங்கியது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :17 டிசம்பர் 2024, 9:47 am IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டின் 3-ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று(டிச. 17) தொடங்கியது.

டாப், ஆர்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பினாலும் கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடியதால் இந்திய அணி 150 ரன்களைக் கடந்துள்ளது. இக்கட்டான சூழலில் அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 10 ரன்களில் நடையைக் கட்டினார். மறுபுறம், சதத்தை தவறவிட்ட ராகுல் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

களத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்டு வரும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடன் விளையாடி உள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி 7 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய அணி உணவு இடைவேளைக்குப் பின் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

இந்திய அணி 278 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து அசத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.