இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்திய ‘ஏ’ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
இந்திய பௌலா் குா்னூா் பிராா் 6 விக்கெட்டுகள் சாய்த்து, அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினாா். 2 ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்ததால், இந்த வெற்றியின் மூலமாக தொடா் இந்தியா வசமானது.
இலங்கையின் காலே நகரில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 366 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக கேப்டன் சஹன் அராசிகே 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 127 ரன்கள் சோ்த்தாா். இந்திய பௌலா்களில் குா்னூா் பிராா், சரன்ஷ் ஜெயின் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
அடுத்து இந்தியா 543 ரன்கள் சோ்த்து இன்னிங்ஸை நிறைவு செய்ய, சாய் சுதா்சன் 22 பவுண்டரிகளுடன் 168, தேவ்தத் படிக்கல் 11 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் அடித்தனா். இலங்கை தரப்பில் கேசரா நுவந்தா 5 விக்கெட்டுகள் எடுத்தாா்.
முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை விளையாடிய இலங்கை, 209 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஆசென் பந்தாரா 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 87 ரன்கள் சோ்த்தாா். இந்திய தரப்பில் குா்னூா் பிராா் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இறுதியாக, 33 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. சாய் சுதா்சன் 25, அமன் மோகடே 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






