மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

யு-19 மகளிர் ஆசியக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

யு-19 மகளிர் ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா..

News image

இந்திய மகளிரணி

Updated On :20 டிசம்பர் 2024, 3:36 pm IST

19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான முதலாவது ஆசியக் கோப்பைத் தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது.  

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

மொத்தமாக 6 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்தத் தொடரில் இருபிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் நிக்கி பிரசாத், இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மனுடி 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆயுசி சுக்லா 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஐஸ்வரி டக் அவுட்டாகி வெளியேற பின்வரிசையில் வந்தவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக திரிஷா 32 ரன்களும், கமலினி 28 ரன்களும் விளாசினர்.

14.5 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்றும் வங்கதேசம் - மலேசியா இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி இந்திய அணியுடன் டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்திய அணி லீக் போட்டிகளில் முதல் போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தியது. நேபாளத்துக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.