தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

News image

நிதீஷ் குமார் ரெட்டி - படம் | AP

Updated On :28 டிசம்பர் 2024, 7:17 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசல்

மூன்றாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, இந்திய அணியை நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.

களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி, டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசினார். அவர் 176 பந்துகளில் 105 ரன்கள் (10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து களத்தில் உள்ளார்.

பரிசுத் தொகை அறிவிப்பு

இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்காக சதம் விளாசியதுடன், டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக நிதீஷ் குமார் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சத்தை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆந்திர கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கெசினேனி சிவநாத் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : ஆந்திர கிரிக்கெட் வாரியத்துக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டவசமான மற்றும் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஆந்திரத்தைச் சேர்ந்த இளம் வீரர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரை கௌரவிக்கும் விதமாக ஆந்திர கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அவருக்கு ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.