தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

30 பந்துகளில் 30 ரன்கள் தேவை; உலகக் கோப்பை வெற்றி குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் தான் எவ்வாறு உணர்ந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா

Updated On :16 ஜூலை 2024, 4:05 pm

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் தான் எவ்வாறு உணர்ந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட, போட்டி அந்த அணிக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், இந்திய அணி அபார பந்துவீச்சால் வெற்றியை வசமாக்கியது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்ததாக ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் என்ன செய்தவென்று தெரியாமல் வெறுமையாக இருந்தேன். ஆனால், எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்கவில்லை. அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், கவனமாக செயல்பட்டு உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய கடமை இருந்தது. எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்த தருணத்தில் நாங்கள் வீசிய 5 ஓவர்கள், நாங்கள் எந்த அளவுக்கு அமைதியாக இருந்து உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தினோம் என்பதைக் காட்டியிருக்கும். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைக்கவில்லை. நாங்கள் போட்டியின் முடிவு குறித்து அச்சமடையவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.