இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களாக பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்தேன். கடைசியாக விளையாடிய 7 சர்வதேசப் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட நான் கைப்பற்றவில்லை. ஆனால், இங்கு முதல் போட்டியிலிருந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறேன். இதுதான் கிரிக்கெட்டின் அழகே. இதுபோன்ற சூழல்களை ஒருவர் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள், சில நேரங்களில் சிறப்பாக செயல்பட முடியாது. ஆனால், தொடர்ச்சியாக நமது உழைப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.