சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News image

ரவி சாஸ்திரி

Updated On :26 ஜூலை 2024, 7:42 pm IST

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கையில் உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீர் - படம் | கேகேஆர் (எக்ஸ்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களுடன் கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் அதிகம் விளையாடியுள்ளார். வெள்ளைப் பந்து போட்டிகளில் வீரர்கள் பலரும் எப்படி விளையாடுவார்கள் என்பது கௌதம் கம்பீருக்குத் தெரியும். கௌதம் கம்பீர் சரியான வயதில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இளமையாகவும் இருக்கிறார்.

அவர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார். அதனால், இந்திய அணி புத்துணர்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். அவருக்கு அருமையான இளம் இந்திய அணி அமைந்துள்ளது. அணியின் பயிற்சியாளராக வீரர்களின் வேலைப்பளு மேலாண்மையை திறம்பட கையாள்வது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக, பந்துவீச்சாளர்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதில் அவருக்கு சவால்கள் இருக்கும் என்றார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை (ஜூலை 27) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.