உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்றவர், ஆனால்... முன்னாள் நியூசி. வீரர் கூறுவதென்ன?

ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image

ஹார்திக் பாண்டியா

Updated On :26 ஜூலை 2024, 7:03 pm IST

ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் எனவும், ஆனால் தொடர்ச்சியாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் ஸ்டைரிஸ் (கோப்புப் படம்)

ஸ்காட் ஸ்டைரிஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா நிறைய திறமைகளைக் கொண்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸைப் போன்றவர் ஹார்திக் பாண்டியா. அவர் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர். ஆனால், அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறுவதாக நினைக்கிறேன். உடல் தகுதிக்கு அவர் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பந்துவீச்சாளராக இருப்பது மிகவும் கடினம். ஒரு பந்துவீச்சாளராக ஹார்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுகிறார். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் ஆல்ரவுண்டராக ஹார்திக் பாண்டியாவை பார்க்க விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.