ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

இந்தியாவுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசி. எழுப்பிவிட்டது: ஆஸி. வீரர்

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி, அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பிவிட்டது.

News image

படம் | AP

Updated On :5 நவம்பர் 2024, 3:41 pm IST

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி, அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக இழந்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த மோசமான தோல்வி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

நம்பிக்கை உடைந்திருக்கும்

நியூசிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி இந்திய அணியின் நம்பிக்கையை உடைத்திருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோஸ் ஹேசில்வுட்

ஜோஸ் ஹேசில்வுட் - படம் | ஐசிசி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி இந்தியாவுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை எழுப்பியிருக்கும். அந்த மிருகம் எப்போது வெளிவரும் என்பதை பார்க்க வேண்டும். சொந்த மண்ணில் 3-0 என தொடரை இழந்ததால், இந்திய அணியின் நம்பிக்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும். இந்திய அணி முழுமையாக தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணிக்கு உதவியாக இருக்கும்.

நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் அருமையாக விளையாடினார்கள். இந்திய மண்ணில் 3-0 என தொடரைக் கைப்பற்றுவது நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினம். அப்படியிருக்க, 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது மிகப் பெரிய விஷயம் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.