ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்பும் ஆஸி. வீரர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.

News image

கே.எல்.ராகுல் (கோப்புப் படம்) - படம் | பிசிசிஐ

Updated On :5 நவம்பர் 2024, 6:08 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்திடம் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அழுத்தம் கொடுப்பேன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் போலண்ட் (கோப்புப் படம்)

ஸ்காட் போலண்ட் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, கே.எல்.ராகுலுக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் பந்துவீச உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கே.எல்.ராகுல் உலக தரத்திலான வீரர். அவருக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, அவரை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புகிறேன் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவதற்காக கே.எல்.ராகுல் முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.